தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

போலீஸ்காரர்களிடம் இருந்து ஆயுதங்களை பாதுகாக்கும் அரசு!

மதுரை:

தேனியில் அதிரடிப்படை போலீஸ்காரரால் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து அனைத்து போலீஸ் நிலையங்களிலும், கிட்டங்கிகளிலும் ஆயுதங்கள்மற்றும் வெடிமருந்துப் பொருட்களையும் பாதுகாப்புடன் வைத்திருக்குமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.

சட்டம்-ஒழுங்குப் பிரிவு கூடுதல் போலீஸ் டைரக்டர் ஜெனரல் எஸ்.குமாரசாமி நிருபர்களிடம் இதுகுறித்துக் கூறுகையில்,

தேனியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிரடிப் படை போலீஸ் கான்ஸ்டபிள் சவுந்தரபாண்டியன் சொத்துத் தகராறு காரணமாக தனது அண்ணன் குடும்பத்தைதுப்பாக்கியால் சுட்டுக்கொன்றார்.

அவர் இதற்காக தனது போலீஸ் பணிக்காக வைத்திருக்கும் துப்பாக்கியைப் பயன்படுத்தியுள்ளார். இது சட்டப்படி குற்றமாகும். அவர் தேசிய பாதுகாப்புச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து தமிழ்நாட்டில் அனைத்துப் போலீஸ் நிலையங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் முதல்கட்டமாகதமிழ்நாட்டில் அனைத்துப் போலீஸ் நிலையங்களிலும், ஆயுதங்கள் வைக்கப்பட்டிருக்கும் கிட்டங்கிகளிலும் அவற்றைப் பாதுகாப்பாக வைத்திருக்க உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.

முன்னதாக தேனியில் நடந்த படுகொலை சம்பவம் குறித்து உயர்போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+