தமிழகத்தில் இன்று
இனி அடையாள அட்டை இல்லாமல் வாக்களிக்க முடியாது
சென்னை:
தமிழகத்தில் 2001-ம் ஆண்டில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில்வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை இல்லாமல் யாரும் வாக்களிக்கஅனுமதிக்கப்படமாட்டார்கள் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா தெரிவித்தார்.
இது தொடர்பாக சென்னையில் நிருபர்களிடம் புதன்கிழமை அவர் கூறியதாவது:
2001-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் புகைப்படஅடையாள அட்டை இல்லாதவர்கள் வாக்களிக்க முடியாது.
தமிழகத்தில் உள்ள வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுவிட்டது.விடுபட்டவர்களுக்கு தற்போது அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது.தேர்தலுக்குள் தமிழகத்தில் உள்ள வாக்காளர்கள் அனைவருக்கும் அடையாள அட்டைவழங்கப்பட்டுவிடும்.
சென்னையில் ராயபுரம், துறைமுகம், ஆர்.கே. நகர், பூங்காநகர் தொகுகளில் வசிக்கும்வாக்காளர்களுக்கு இம் மாதம் 26, 27 தேதிகளில் அடையாள அட்டை வழங்கப்படும்.
காஞ்சிபுரத்தில் 26-ம் தேதியும், திருவண்ணாமலை, ஈரோடு பகுதிகளில் 27-ம்தேதியும், சிவகங்கையில் ஆகஸ்ட் 3-ம் தேதியும், தர்மபுரியில் 5-ம் தேதியும்,சேலத்தில் 6-ம் தேதியும் அடையாள அட்டை வழங்கப்படும்.
அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன என்றார் நரேஷ் குப்தா.












Click it and Unblock the Notifications