தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

தேவாலயங்களில் குண்டுவெடிக்க கிறிஸ்தவர்களே காரணம் - ஜெயேந்திரர்

காஞ்சிபுரம்:

இந்தியாவில் கிறிஸ்தவ தேவாலயங்களில் நடந்த குண்டு வெடிப்புகளுக்குகிறிஸ்தவர்களிடேயை ஏற்படும் மோதல்தான் காரணம் என்று காஞ்சி காமகோடிபீடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறியுள்ளார்.

காஞ்சிபுரத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

சமூகத் தொண்டு, கல்வித்தொண்டு, மருத்துவ தொண்டு இவைகளுடன் கிறிஸ்தவர்கள்நிறுத்திக் கொள்ளவேண்டும். அவற்றுடன் நிறுத்திக் கொண்டால் அவர்களுக்குமட்டுமல்ல, யாருக்கும் பிரச்சினையில்லை.

இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் கிறிஸ்தவர்கள் கொலைசெய்யப்படுகிறார்கள். இது பற்றி ஐக்கிய நாடுகள் சபை ஏன் கேள்வி கேட்கவில்லை?

கிறிஸ்தவ தேவாலயங்களில் நடந்த குண்டு வெடிப்புகளுக்கு பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.உளவாளிகள் காரணம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி, ஆந்திரமுதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் கூறியுள்ளனர்.

இதற்கும் சங் பரிவார் அமைப்புக்கும் தொடர்பு இல்லை. ஐ.எஸ்.ஐ ஊடுருவலைத்தடுக்க இஸ்ரேலுக்குச் சென்று அத்வானி ஆலோசனை நடத்தி விட்டு வந்தார். அந்தஆலோசனையின்படி அவர் செயல்படவேண்டும் என்றார் ஜெயேந்திர சரஸ்வதிசுவாமிகள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+