தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

தமிழகத்தில் உல்பா தீவிரவாதிகளின் ரகசிய முகாம் - போலீஸார் அதிரடிச் சோதனை

சென்னை:

தமிழகத்தில் உல்பா தீவிரவாதிகள் ரகசிய முகாம் அமைத்து விடுதலைப் புலிகளுடன் தொடர்பு ஏற்படுத்த முயற்சித்து வந்த சதித் திட்டம் தெரியவந்துள்ளது.தமிழகம் வந்த அஸ்ஸாம் போலீஸார், வேலூரில் நடத்திய அதிரடிச் சோதனையில் உல்பா தீவிரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டார்.

சமீபகாலமாக கிறிஸ்தவ தேவாலயங்களில் நடைபெறும் தாக்குதல் சம்பவங்களின் பின்னணி குறித்து நாடு முழுவதும் தீவிர விசாரணைமேற்கொள்ளப்பட்டுள்ளது. தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழகம், ஆந்திரா, கர்நாடகத்தில் ரகசிய சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

விசாரணையில் தாக்குதல் சம்பவங்களுக்கும் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த உல்பா தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவந்தது. உடனேஇது குறித்து அஸ்ஸாம் போலீஸாருக்குத் தகவல் தரப்பட்டது. அதன்படி அஸாஸாம் போலீஸார் தென் மாநிலங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அவர்கள் நடத்திய விசாரணையில் உல்பா தீவிரவாதிகள் நாடு முழுவதும் பரவி, அந்தந்த மாநில தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு செயல்பட்டு வருவதாக தெரியவந்தது. மேலும் உல்பா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த முக்கிய தளபதியான ஹசன் அலி என்பவர் தமிழகத்தில்தங்கியிருக்கும் தகவல் தெரிந்தது.

தமிழகத்தில் குறிப்பாக வேலூரில் தங்கி விடுதலைப் புலிகள் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுக்கும், உல்பா தீவிரவாத அமைப்புக்கும் இடையேதொடர்பை ஏற்படுத்தும் முயற்சியில் ஹசன் அலி ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.

வேலூரில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்த ஹசன் அலியை தமிழகப் போலீஸார் உதவியுடன் அஸ்ஸாம் மாநில போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.வேலூர் நீதிமன்றத்தில் அவரை ஆஜர் செய்துவிட்டு மேல் விசாரணைக்காக அவரை அஸ்ஸாமுக்குக் கொண்டு சென்றுள்ளனர் அம் மாநில போலீஸார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+