For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
பங்காரு அடிகளாரை எதிர்த்து போராட்டம் - விடுதலைச் சிறுத்தைகள் அறிவிப்பு
சென்னை:
மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரை எதிர்த்துப் போராட்டம் நடத்தப்படும் என்று விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
சென்னையில் நிருபர்களிடம் புதன்கிழமை அவர் கூறியதாவது:
மேல்மருவத்தூரில் ஆன்மிகம் என்ற பெயரில் ஜி.எஸ்.டி. சாலையில் 350 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்புசெய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஆன்மிகம் என்ற பெயரில் இது போன்ற நடவடிக்கையில் பங்காரு அடிகளார் ஈடுபடுவதைக் கண்டித்தும்,மேல்மருவத்தூரில் வசிக்கும் தலித் மக்களை காலி செய்யச் சொல்லி மிரட்டுவதை எதிர்த்தும் ஜூலை26-ம் தேதி செங்கல்பட்டில் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படும் என்றார் திருமாவளவன்.
Comments
இந்தியா தமிழ் தமிழ்நாடு இலங்கை தட்ஸ்தமிழ் தமிழகம் செய்திகள் tamil news tamil nadu news tamilnadu politics online tamil news tn politics world news indian politics இணைய தளம்
Story first published: Wednesday, July 19, 2000, 5:30 [IST]