தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

கர்நாடக மாநிலத்தில் சர்ச்களில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக இப்ராஹிம் என்பவர் கைதான பிறகு, கர்நாடகத்திலும் ஆந்திரத்திலும் இம்மாதிரி அராஜகங்களை நிகழ்த்தியவர்கள் எந்த ஹிந்து அமைபினரும் அல்ல என்பது தெளிவாகி இருக்கிறது.

சித்திக் என்பவர் பெயரால் நடத்தப்படுகிற - அல்லாவும், ஈஸ்வரனும் ஒன்று - என்கிற சில முஸ்லிம்களைக் கொண்ட - ஓர் அமைப்புதான் இந்தவெடிகுண்டு நிகழ்ச்சிகளுக்குக் காரணம் என்பது கண்டறியப்பட்டிருக்கிறது.

இவர்களுக்குப் பெரிய அங்கத்தினர் எண்ணிக்கை இருப்பதாகத் தெரியவில்லை: முஸ்லிம்களோ, ஹிந்துக்களோ இதை ஏற்பதாகவும் தகவல் இல்லை.

பாகிஸ்தானுடன் இந்த இயக்கத்தின் தலைவருக்குத் தொடர்பு உண்டு என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.

இதுபற்றி இவ்வளவு தகவல்கள் வெளியாகி இருக்கிற நேரத்தில், இந்த சம்பவங்கள் நடந்த போது நாம் என்ன கருத்து தெரிவித்தோம் என்பதைநினைத்துப் பார்க்கிறோம். சென்ற ஜூன் மாதம் 21-ம் தேதியிட்ட துக்ளக் இதழில் எச்சரிக்கைப் பகுதியில் ஒரு பகுதி இது:

...இது உள்துறை அமைச்சகம் கூறுகிற மாதிரி, இனக் கலவரத்தைத் தூண்டுவதற்காக பாகிஸ்தான் ஏஜெண்டுகள் செய்த காரியமாகவும் இருக்கலாம்.

அல்லது வேறு சிலர் கூறுகிற மாதிரி சில ஹிந்து அமைப்புகளின் காரியமாகவும் இருக்கலாம்.

செய்தவர்கள் யாராக இருந்தாலும் சரி. அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, தகுந்த தண்டனை பெறுமாறு செய்ய வேண்டும். இது மத்திய அரசின்கடமை.

இது தவிர ஜூன் 28-ம் தேதி துக்ளக் இதழில் நினைத்தேன் எழுதுகிறேன் பகுதியில் கூறப்பட்ட கருத்து இது:

... இது மதவெறியர்களால் நடத்தப்பட்ட தாக்குதல்களா அல்லது வேறு காரணங்களால் நிகழ்ந்திருக்கிற கிரிமினல் வேலைகளா என்பது தெரியவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+