தமிழகத்தில் இன்று
ஓய்வு பெறுகிறார் அர்ஜுன ரணதுங்கா
கொழும்பு:
சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வுபெறுவதாக இலங்கை அணியின்முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்கா அறிவித்துள்ளார்.
தனது இந்த முடிவை இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு அவர்தெரிவித்துள்ளார். நீண்ட ஆலோசனைக்குப் பிறகே இம் முடிவை எடுத்துள்ளதாகஅவர் தெரிவித்தார்.
36 வயதாகும் அர்ஜுன ரணதுங்கா, இலங்கை அணி தான் விளையாடி முதல் மற்றும்100-வது டெஸ்ட் போட்டிகளில் ரணதுங்காவும் விளையாடி சாதனை படைத்துள்ளார்என்பது குறிப்பிடத்தக்கது.
1996-ம் ஆண்டு இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் நடைபெற்றஉலகக் கோப்பைப் போட்டியில் அர்ஜுன ரணதுங்கா தலைமையிலான இலங்கைஅணி இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்து முதல்முறையாக உலகக்கோப்பையை வென்றது.
ஆனால், இங்கிலாந்தில் கடைசியாக நடைபெற்ற உலகக் கோப்பைப் போட்டியில்இலங்கை அணி படுதோல்வி அடைந்தது. அப்போது இலங்கை அணியின் கேப்டனாகஇருந்த அர்ஜுன ரணதுங்காவுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து கிரிக்கெட் விளையாட்டிலிருந்து சற்று விலகியிருந்த அவர் மீண்டும்இலங்கை அணியில் விளையாடினார். தற்போது இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துவரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டித் தொடர் முடிந்ததும்ஓய்வுபெறுவதாக அவர் அறிவித்துள்ளார்.
இதுவரை 90 டெஸ்டுகள் மற்றும் 269 ஒருநாள் கிரிக்கெட் ஆட்டங்களில் ரணதுங்காவிளையாடியுள்ளார். இலங்கை அணியின் கேப்டனாக 56 டெஸ்டுகளிலும், 193ஒருநாள் ஆட்டங்களிலும் விளையாடியுள்ளார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications