For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

கொடுமைக்குள்ளாகும் தமிழர்கள்

கொழும்பு:

இலங்கையில் மனித உரிமைகள் கொஞ்சம் கூட மதிக்கப்படுவதில்லை என்று ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் மனித உரிமை அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் கடந்த மே 3-ம் தேதி நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டது. அதன் பிறகு இலங்கையில் மனித உரிமைகள் எவ்வாறு மதிக்கப்படுகிறதுஎன்பது குறித்து ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் நிறுவனம் ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில், போலீஸ் மற்றும் ராணுவம் ஆகிய இரண்டும், கொஞ்சம் கூட மனிதஉரிமை குறித்து அக்கறை காட்டுவதில்லை என்று கூறியுள்ளது.

18 பக்கங்கள் கொண்ட ஆம்னஸ்டி நிறுவன அறிக்கையில், பாதுகாப்புப் படையினருக்கு அதிக அதிகாரங்கள் கொடுத்துள்ளதன் மூலம், அவர்களதுபாதுகாப்பின் கீழ் இருப்போர் அதிக கொடுமைகளை சந்திக்க நேரிடும். காவலில் உள்ள கைதிகள் காணாமல் போவதும், மர்மமான முறையில்இறப்பதும் அதிகரிக்கும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அவசர நிலை அறிவிக்கப்பட்ட பிறகு கொடுமைகளும் அதிகரித்து விட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தோட்டத் தொழிலாளரான கணேஷ்சந்திரசேகரன் என்பவர் தோட்டத்தில் நடந்த வெடி விபத்தில் இறந்தார். இவரின் குடும்பத்தை மிரட்டிய ராணுவ வீரர்கள், கணேஷுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் தொடர்பு இருப்பதாக கையெழுத்துப் போடுமாறு மிரட்டியதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பல்வேறு விதத்திலும் தமிழர்கள் கொடுமைப்படுத்தப்படுவதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பலர் கொடுமை காரணமாக இறப்பதாகவும்அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X