தமிழகத்தில் இன்று
மீனவர் மோதலில் ஒருவர் படுகொலை
நாகப்பட்டனம்:
பஞ்சாயத்து உறுப்பினர்களை மாற்றுவது தொடர்பாக மீனவர்களுக்கிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். 7 பேர்படுகாயமடைந்தனர்.
நாகப்பட்டனம், நம்பியார் நகர் மீனவர் கிராமத்தில் பஞ்சாயத்துத் தலைவராக இருந்தவர் மணி. கடந்த ஆண்டு இந்தக் கிராமத்தைச் சுற்றியுள்ள 10கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் மணி தலைமையில் இருந்த பஞ்சாயத்தைக் கலைத்து விட்டு புதிய நிர்வாகிகளை நியமித்தனர்.
இந்தப் புதிய பஞ்சாயத்தினர் மீனவர் கிராமத்தின் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் அதிக அபராதம் விதிக்கிறார்கள். இதனால்இவர்களை நீக்க வேண்டும் என்று கலைக்கப்பட்ட பஞ்சாயத்துத் தலைவர் மணி சார்பில் புகார் கூறப்பட்டது.
இந்நிலையில் 21 ம் தேதி கிராம பஞ்சாயத்துக் கூட்டம் கூட்டப்பட்டது. இந்தக் கூட்டத்தில் புதிய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று மணிசார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து எந்த முடிவும் எடுக்கப்படாமல் பஞ்சாயத்துக் கூட்டம் முடிந்தது.
இந்நிலையில் சனிக்கிழமை எதிர்கோஷ்டியைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் மணி தரப்பினரை பயங்கர ஆயுதங்களால் தாக்கினர். இதில் ராஜூ என்பவர் சம்பவஇடத்திலேயே இறந்தார். 7 பேர் படுகாயமடைந்தனர்.
இந்தச் சம்பவத்தால் நாகைப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications