தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
பிரபாகரனின் தாயைச் சந்தித்தார் நெடுமாறன்
திருச்சி:
திருச்சி அருகேயுள்ள முசிறியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் தாய் பார்வதியை,தமிழர் தேசிய இயக்கத் தலைவர் ப. நெடுமாறன் சந்தித்தார்.
இரண்டு மாதத்துக்கு முன் திடீரென்று பக்கவாத நோய் தாக்கியதால் முசிறி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் பார்வதி. அவரை, விடுதலைப்புலிகளின் தீவிர ஆதரவாளரான நெடுமாறன் சந்தித்து, உடல் நலம் குறித்து விசாரித்தார்.
நெடுமாறன் வந்ததையடுத்து மருத்துவமனைக்குப் பலத்த போலீஸ் காவல் போடப்பட்டிருந்தது. அவரும் பார்வதியும் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தபோதுஅந்த அறைக்கு மருத்துவர்கள், நர்ஸுகள் உள்ளிட்ட யாரும் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications