For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
தைவானிலும் நிலநடுக்கம்
தைபே:
தைவான் நாட்டில் செவ்வாய்க்கிழமை அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், பெரிய பாதிப்பு ஏதும் இல்லை என்று அரசுஅதிகாரிகள் தெரிவித்தனர்.
அதிகாலை 3.40 மணி அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் பாதிப்பு ரிச்டெர் அளவுகோளில் 5.7 என்று பதிவானது. நிலநடுக்கத்தின் மையம்வடகிழக்குப் பகுதியில் உள்ள கடற்கரை நகரமாகன இலானில் இருந்தது.
இந்த நிலநடுக்கம் லேசானதுதான் என்றும், உயிருக்கோ உடமைக்கோ பெரிய பாதிப்பு ஏதும் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமீபகாலமாக தைவான் நாட்டில் லேசான நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2,400 பேர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
இந்தியா தமிழ் தமிழ்நாடு இலங்கை தட்ஸ்தமிழ் தமிழகம் செய்திகள் tamil news tamil nadu news tamilnadu politics online tamil news tn politics world news indian politics இணைய தளம்
Story first published: Tuesday, July 25, 2000, 5:30 [IST]