தமிழகத்தில் இன்று
பழம்பெரும் நடிகை ஜீவரத்தினம் மரணம்
சென்னை:
1940-களில் தமிழ்த் திரைப்பட உலகைக் கலக்கிய நடிகை யு.ஆர். ஜீவரத்னம், சென்னையில் புதன்கிழமை காலை காலமானார்.
73 வயதான அவர் நீண்ட நாட்களாக நோய் வாய்ப்பட்டிருந்தார். அவருக்கு 4 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
பக்தகெளரி, கண்ணகி, பூம்பாவை, அபிமன்யூ உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்தவர் ஜீவரத்னம். நடிப்புடன், தனது இனிமையான குரலால் பல பாடல்களைப்பாடியதுடன், பல நடிகைகளுக்குப் பின்னணி குரலும் கொடுத்துள்ளார்.
40 படங்களுக்கும் மேல் நடித்துள்ள இவர், தனது திரையுலக வாழ்க்கையை 10 வயதில் தொடங்கினார். முதலில் மிகப் பிரபலமான மாடர்ன் தியேட்டர்ஸில்சேர்ந்தார். நடிப்பையும், பாடும் திறமையையும் அங்கேயே கற்றார்.
கர்நாடக இசை நிகழ்ச்சிகளையும் ஜீவரத்னம் நடத்தியுள்ளார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராமமான ஊஞ்சலூரில் இறுதிச் சடங்குநடைபெறுகிறது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications