For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

"கார்கில் தியாகிகளை நினைவு கூர்வோம்

சென்னை:

நாட்டைப் பாதுகாக்க கார்கில் தங்களது உயிர்களைத் தியாகம் செய்த இந்தியவீரர்களை நினைவு கூருமாறு தமிழக மக்களுக்கு முதல்வர் கருணாநிதி கோரிக்கைவிடுத்துள்ளார்.

கார்கில் போரின் நினைவாக புதன்கிழமை கார்கில் தினம், நாடு முழுவதிலும்அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழக முதல்வர் விடுத்துள்ள செய்தி:

நாட்டுக்காக உயிர் விட்ட தியாக வீரர்களை பாராட்டுவோம். அவர்களது தியாகத்தைநினைவுகூர்வோம்.

கார்கில் போருக்காக நாடே நிதி திரட்டியபோது தமிழகம் அதில் முன்னணியில்இருந்தது. தமிழக மக்கள் ஒன்று திரண்டு ரூ. 58.85 கோடி நிதியைக் கொட்டிக்கொடுத்தனர்.

தமிழகத்தைச் சேர்ந்த 19 ராணுவ வீரர்கள் தங்களது இன்னுயிரைத் தியாகம் செய்தனர்.இவர்களது குடும்பத்திற்குத் தலா ரூ. 5 லட்சம் நிதியை தமிழக அரசு வழங்கியது.இதுதவிர, கார்கில் தியாகிகளின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்புவழங்கியுள்ளது.

கார்கில் போரின்போது இந்தியா மேற்கொண்ட நிலைக்கு சர்வதேச அளவில் நல்லஆதரவு கிடைத்தது. பிரதமர் வாஜ்பாயியின் புத்திசாலித்தனமான அணுகுமுறைக்குநல்ல பலன் கிடைத்தது. இந்தியாவின் பெயரும் சர்வதேச அளவில் உயர்ந்தது.

கார்கில் போரின் போது நாட்டு மக்களின் தேசிய உணர்வையும் மீறி, ஒறுமைப்பாட்டுஉணர்வு வெளிப்பட்டது என்று கூறியுள்ளார் கருணாநிதி.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X