தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

யாழ்ப்பாணத்திலிருந்து கப்பல்களை இயக்க புலிகள் ஒப்புதல்

கொழும்பு:

இலங்கையின் வட பகுதியிலிருந்து பயணிகள் கப்பல் போக்குவரத்தைத் துவக்கவிடுதவைப்புலிகள் ஒப்புதல் அளித்துள்ளனர்.

இலங்கையில் தனி ஈழம் கோரி விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் கடந்த 17ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. இந்தப் போரின் காரணமாக இலங்கையில் கப்பல்போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வட பகுதிகளுக்கு வரும் கப்பல்களைத்தாக்கி வந்தனர். கடந்த மாதம் 26-ம் தேதி தற்கொலைப் படை மூலம் இலங்கை ராணுவவீரர்களுக்கு உணவு, சிமெண்ட் கொண்டு வந்த கப்பலை அழித்தனர்.

விடுதலைப் புலிகளின் இந்த நடவடிக்கையை நிறுத்த இலங்கை அரசு சர்வதேசசெஞ்சிலுவை சங்கத்தின் உதவியை நாடியது. செஞ்சிலுவைச் சங்கத்தின் நடவடிக்கையைத்தொடர்ந்து இலங்கையின் வடக்குப் பகுதியில் கப்பல் போக்குவரத்தைத் தொடங்கவிடுதலைப் புலிகள் எழுத்து மூலம் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

கப்பல் மூலம் ராணுவத்திற்கு உணவு மற்றும் ஆயுதங்களை கொண்டு வர கூடாது என்றநிபந்தனையுடன் கப்பல் போக்குவரத்திற்கு விடுதலைப் புலிகள் ஒப்புதல் அளித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+