தமிழகத்தில் இன்று
பாஸ்போர்ட் ஆபிஸ் பின்னே... கலெக்ஷன் சென்டர் முன்னே
சென்னை:
பாஸ்போர்ட் அலுவலகம் திறப்பதற்கு முன் ஏற்பாடாக கோவையில் பாஸ்போர்ட்"கலெக்ஷன் சென்டர் திறக்கப்படும் என மண்டல பாஸ்போர்ட் அலுவலர் மகாலிங்கம்தெரிவித்துள்ளார்.
சென்னையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
வெளிநாடுகளுக்குச் செல்ல பாஸ்போர்ட் வழங்குவதில் ஏற்படும் காலதாமதத்தைத்தவிர்க்கவும், புதிய தொழில்நுட்பப்படி விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்யவும்ஒரு வெப்சைட் துவங்கப்பட்டுள்ளது.
இந்த வெப்சைட்டில் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்க விண்ணப்பப் படிவம் இடம்பெற்றுள்ளது. இந்த விண்ணப்பப் படிவத்தை பயன்படுத்தி விண்ணப்பிப்பவர்களுக்குமண்டல பாஸ்போர்ட் அலுவலம், ஒரு கார்டு அனுப்பி வைக்கும்.
மேலும், இந்த வெப்சைட்டில் ஒவ்வொரு வாரமும் பாஸ்போர்ட் விண்ணப்பத்தின்நிலை குறித்த தகவல்கள் வெளியாகும்.
விண்ணப்பதாரார் தன்னுடைய விண்ணப்பத்தின் நிலை குறித்து அறியவேண்டுமானால், அவரது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட்டால்தகவல்கள் கிடைக்கும்.
பாஸ்போர்ட் வழங்குவதில் ஏற்படும் கால தாமதத்தைத் தவிர்க்க, இயந்திரங்களினால்பாஸ்போர்ட் தயார் செய்யப்பட்டு வழங்கப்படும். இந்த முறை முதன் முதலாகடில்லியில் அறிமுகப்படுத்தப்பட்டது. தென்னிந்திய அளவில் தற்போது சென்னையில்அறிமுகப்படுத்தப்படுகிறது.
கோவை மற்றும் பாண்டிச் சேரியில் விரைவில் "பாஸ்போர்ட் கலெக்ஷன் சென்டர்கள்அமைக்கப்படவுள்ளன. இதன் செயல்பாடுகளைத் தொடர்ந்து, இங்கு பாஸ்போர்ட்அலுவலகம் அமைக்கப்படுவது குறித்து பரிசீலனை செய்யப்படும்.
கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் வரை 76 ஆயிரத்து 413 பாஸ்போர்ட்கள்வழங்கப்பட்டுள்ளன. தாட்கால் திட்டத்தின் கீழ் 4 ஆயிரத்து 200 பாஸ்போர்ட்களும்வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தினால் கூடுதலாக அரசுக்கு 65 லட்ச ரூபாய்வருமானம் கிடைத்துள்ளது என்று மகாலிங்கம் தெரிவித்தார்.