தமிழகத்தில் இன்று
கோவையில் ஆக. 2-ல் தபால் தலை கண்காட்சி
கோவை:
கோவையில் வரும் ஆகஸ்ட் 2--ம் தேதி முதல் நான்கு நாட்களுக்கு தபால் தலை மற்றும்நாணயவியல் கண்காட்சி நடக்கிறது.
இது குறித்து தலைமைத் தபால் அதிகாரி விமலா குமார் கூறியதாவது:
கோவை பத்மாவதி கலாச்சார மையத்தில் வரும் ஆகஸ்ட் 2ம் தேதி முதல் தபால் தலைமற்றும் நாணயவியல் கண்காட்சி நடக்கவுள்ளது. இந்தக் கண்காட்சியில் 460 தபால்தலை தொகுப்புகள் மற்றும் 170 நாணயவியல் தொகுப்புகள் இடம் பெறுகின்றன.
பல்வேறு நிபுணர்கள் சேகரித்த தபால் தலை மற்றும் பழங்கால நாணயங்களும் இடம்பெறவுள்ளன. இதுவரை இந்த கண்காட்சியில் கலந்து கொள்ள 460 விண்ணப்பங்கள்வந்து சேர்ந்துள்ளன.
இதில், தபால் தலை சேகரிப்போருக்கு போட்டிகளும் இடம் பெறுகின்றன. சீனியர்,ஜூனியர் மற்றும் பள்ளி மாணவர்கள் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் இப் போட்டிநடத்தப்படுகிறது.
தமிழக கலை, கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டு நடக்கும் இந்தகண்காட்சியில், கயத்தாறு மின்சார ஆலை பற்றிய தபால் தலையும் இடம் பெறுகிறது.இக் கண்காட்சி தொடர்பான கவர் ஒன்றும் வெளியிடப்படவுள்ளது.
நீலகிரி, கொல்லி மலை, தார் பாலைவனம், போன்ற இயற்கை சுற்றுச் சூழல்தொடர்பான செய்திப் படம் இக்கண்காட்சியில் இடம் பெறவுள்ளது.
கண்காட்சியை கோவை மேயர் கோபாலகிருஷ்ணன் திறந்து வைக்கிறார்.
தமிழ்நாடு வட்ட தலைமைத் தபால் அதிகாரி மேனன், தபால் சேவை இயக்குநர்ராமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்கின்றனர் என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications