தமிழகத்தில் இன்று
ராணுவமும் போர் நிறுத்தம் அறிவித்தது
ஸ்ரீநகர்:
ஹிஸ்புல் முஹாஜிதின் தீவிரவாத அமைப்புக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுததுவதாக இந்திய ராணுவம்அறிவித்துள்ளது.
இருப்பினும் பிற தீவிரவாத அமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கை தொடரும் என்று ராணுவம் கூறியுள்ளது.மூன்று மாதம் போர் நிறுத்தம் செய்வதாக சமீபத்தில் ஹிஸ்புல் முஜாஹிதீன்கள் அறிவித்திருந்தனர். காஷ்மீர்பிரச்சினைக்குத் தீர்வு காண பேச்சு நடத்த வசதியாக போர் நிறுத்தம் செய்வதாக அவர்கள் கூறியிருந்தனர். இந்தநிலையில் ராணுவமும் போர் நிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளது.
ராணுவத்தின் 15-வது பிரிவின் கமாண்டிங் அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் ஜான் ராய் முகர்ஜி இதுகுறித்துக்கூறுகையில், ஹிஸ்புல் முஜாஹிதீன்களுக்கு எதிரான தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு ராணுவ வீரர்களுக்குஉத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும் பிற தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் நிறுத்தப்பட மாட்டாது.
ஹிஸ்புல் தீவிரவாதிகளையும், பிற தீவிரவாதிகளையும் எங்களால் எளிதில் அடையாளம் காண முடியும். ஹிஸ்புல்தீவிரவாதிகளின் மறைவிடங்கள் எங்களுக்கு நன்றாகத் தெரியும். போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பிறகு ஹிஸ்புல்தீவிரவாதி மொல்வி பெரோஸ் உத் தின் கொல்லப்பட்டது துரதிர்ஷ்டவசமானது. அவரைக் கொன்ற ராணுவவீரரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
ஹிஸ்புல் தீவிரவாதிகளின் போர் நிறுத்தத்தை நாங்கள் மதிக்கிறோம். அவர்களுக்கு எதிரான நடவடிக்கையைஇப்போது நிறுத்தி வைத்துள்ளோம். காஷ்மீர் மக்களின் விருப்பத்திற்கிணங்க ஹிஸ்புல் தீவிரவாதிகள் போர்நிறுத்தம் அறிவித்துள்ளனர். தீவிரவாதத்தால் காஷ்மீரிகள் வெறுத்துப் போயுள்ளனர். அமைதி வாழ்க்கையைஅவர்கள் விரும்புகிறார்கள் என்றார் அவர்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications