தமிழகத்தில் இன்று
"உலகத்தை வீழ்த்த கைகோர்த்த "எதிரிகள்
லண்டன்:
இந்திய, பாகிஸ்தானிய கிரிக்கெட் வீரர்கள் சேர்ந்து ஒரே அணியில் சேர்ந்து விளையாட முடியுமா?. முடியும் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார்கள்இந்த "எதிரிகள்.
இலங்கையில் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி நடந்தபோது ஆஸ்திரேலியாவும், மேற்கு இந்தியத் தீவுகள் அணியும் வன்முறையைக் காரணம்காட்டி இலங்கைக்கு வர மறுத்தபோது, இந்திய, பாகிஸ்தானிய வீரர்கள் இணைந்த அணி இலங்கை சென்றது. அங்கு நடந்த "சும்மா போட்டியில் இலங்கைஅணியுடன் மோதினர்.
இப்போது மீண்டும் கைகோர்த்திருக்கிறார்கள் இந்த முன்னாள் "சகோதரர்கள். சனிக்கிழமை இவர்கள் சேர்ந்த ஆசிய அணிக்கும், ரெஸ்ட் ஆப் வேர்ல்ட்அணிக்கும் இடையே லண்டனின் ஓவல் மைதானத்தில் காட்சிப் போட்டி நடந்தது. இதில் "சகோதரர்கள் அணி தோல்வியுற்றது. ஆனால் அதுமுக்கியமல்ல. "உலகத்தைத் தோற்கடிக்க இவர்கள் சேர்ந்து முயன்றதுதான் விஷயம்.
இந்திய, பாகிஸ்தானிய ரசிகர்கள் ஒன்றாக அமர்ந்து, தங்கள் நாட்டுக் கொடிகளை அசைத்தபடி தங்களது வீரர்களுக்கு ஆதரவு தந்தது வித்தியாசமானகாட்சியாக இருந்தது. பார்த்தாலே முறைத்துக் கொள்ளும் இவர்கள் இப்போட்டியின்போது நட்புடன் காணப்பட்டது பார்க்கவே வித்தியாசமாக இருந்தது.
முதலில் ஆடிய ஆசிய அணி 204 ரன்கள் சேர்த்தது. நிகில் சோப்ரா சிக்ஸ் அடித்தபோது பாகிஸ்தானிய ரசிகர்கள் கொடியசைத்து மகிழ்ச்சி தெரிவித்தனர். சக்லைன்முஷ்டாக் விக்கெட் வீழ்த்தியபோது, இந்தியர்கள் பங்க்ரா ஆடி உற்சாகம் கொடுத்தனர். வாசிம் அக்ரமும், ஸ்ரீநாத்தும் பந்துவீச்சைத் துவக்கினர். சிலஓவர்களிலேயே ஆளுக்கு ஒரு விக்கெட்டும் கிடைத்தது. பிறகு வந்தனர் சக்லைனும், கும்ப்ளேவும்.
இவர்கள் தவிர அஸாருதீன், நயன் மோங்கியா, இலங்கையின் அரவிந்த டிசில்வாவும் ஆசிய அணியில் இடம் பெற்றிருந்த நட்சத்திரங்கள் ஆவர்.
பின்னர் ஆடிய ரெஸ்ட் ஆப் வேர்ல்ட் அணி வெற்றி இலக்கை எளிதாக எட்டியது. நாதன் ஆஸ்ட்லே 51 ரன்கள் சேர்த்தார். ஆசிய அணித் தரப்பில் டிசில்வா 35ரன்களும், அஸார் 33 ரன்களும், சோப்ரா 30 ரன்களும் சேர்த்தனர். சக்லைனுக்கு நான்கு விக்கெட்டுகள் கிடைத்தன. சோப்ராவுக்கு 2 கிடைத்தது.
இந்தப் போட்டியில் ஆசிய அணி தோல்வியுற்றது பெரிய விஷயமில்லை. ஆனால் முறைத்துக் கொண்டு திரியும் இரு நாடுகளும் கைகோர்த்தபடி மைதானத்தில்திரிந்ததைப் பார்ப்பது சந்தோஷமான விஷயம்தானே!.