For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

400 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஆம்புரோஸ்

By Staff
Google Oneindia Tamil News

சிறுமியைக் கொன்ற வாலிபருக்கு 31 ஆண்டு சிறை

சென்னை:

நகைக்காக சிறுமியைக் கொன்ற வாலிபருக்கு 31 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இது பற்றிய விவரம்:

விழுப்புரம் மாவட்டம், திருக்கோயிலூர் அருகேயுள்ள கோட்டாமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுகம். இவரது மகள் பிரியா (4).

1999-ம் ஆண்டு ஜனவரி 16-ம் தேதி வீட்டின் பின்புறம் பிரியாவும் அவளது அக்கா பழனியம்மாளும் குளித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த அரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை,

பழனியம்மாளின் கழுத்தில் அரிவாளை வைத்து மிரட்டி கழுத்திலிருந்த ஜிமிக்கியை கேட்டான். இதைப் பார்த்த பிரியா, திருடன் திருடன் என்று கத்தினாள்.

இதனால் ஆத்திரமடைந்த அவன் பிரியாவை அருகில் இருந்த தண்ணீர் தொட்டியில் அழுத்தி கொலை செய்துவிட்டு பழனியம்மாள் கழுத்திலிருந்த ஜிமிக்கியைப்பறித்துக் கொண்டு ஓடிவிட்டான்.

இது தொடர்பாக திருக்கோயிலூர் போலீஸார், ஏழுமலையைக் கைது செய்து விழுப்புரம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அருணா ஜெகதீசன், சிறுமி பிரியாவைக் கொலை செய்த குற்றத்துக்காக 14 ஆண்டுகளும், பழனியம்மாளைக் கொல்லமுயன்றதற்காக 7 ஆண்டுகளும், நகை பறித்ததற்காக 10 ஆண்டுகளும் என மொத்தம் 31 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 1,500 அபராதம்விதித்துத் தீர்ப்பளித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X