400 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஆம்புரோஸ்
நடத்தையில் சந்தேகம்: மனைவியைக் கொன்ற கணவன்
சென்னை:
சென்னை அயனாவரம் செல்லியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் (28),இவருக்கும் சாந்தி (24) என்பவருக்கும் 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.
அயனாவரத்தில் உள்ள ரயில்வே திருமண மண்டபத்தில் மானேஜராக ஸ்ரீதர்பணியாற்றி வந்தார். சமீபகாலமாக கணவன்-மனைவி இடையே ஒருவர் மீது ஒருவர்சந்தேகம் இருந்து வந்தது.
இந் நிலையில், ஆடி மாதத்தில்தான் திருமணம் நடக்காதே. அப்படியிருக்கும்போதுஏன் வீட்டுக்கு லேட்டாக வருகிறீர்கள். உங்களுக்கு வெளியில் தொடர்பு உள்ளதாஎன்று மனைவியும், நீயும் கூடத்தான் பக்கத்து வீட்டு ஆண்களுடன் சிரித்து சிரித்துபேசுகிறாய். அவர்களுடன் உனக்குத் தொடர்பு உள்ளதா என்று கணவனும் ஒருவர் மீதுஒருவர் சந்தேகப்பட்டு கேட்டனர்.
இது தொடர்பாக திங்கள்கிழமை இரவு இருவருக்கும் இடையே வீட்டில் கடுமையானசண்டை நடந்தது. இருவரையும் வீட்டில் இருந்த பெரியவர்கள் சமாதானப்படுத்தினர்.
தூங்கச் சென்ற பிறகும் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.அப்போது, அறையிலிருந்த பேனா கத்தியை எடுத்து சுமதியின் வயிற்றில் சரமாரியாகக்குத்திவிட்டு கத்தியுடன் நேரே அயனாவரம் போலீஸ் நிலையத்துக்குச் சென்று ஸ்ரீதர்சரணடைந்தார்.
வயிற்றில் கத்திக்குத்து பட்ட சாந்தி சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்துஅயனாவரம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.