400 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஆம்புரோஸ்
கருணாநிதியின் கோவை நிகழ்ச்சிகள் ரத்து
கோவை:
தமிழக வருவாய்த் துறை அமைச்சர் நாஞ்சில் மனோகரன் மறைவையொட்டி, முதல்வர்கருணாநிதியின் கோவை பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழக வருவாய்த்துறை அமைச்சர் நாஞ்சில் மனோகரன், ஆகஸ்ட் 1-ம் தேதி காலைமாரடைப்பால் இறந்தார். இதையடுத்து, முதல்வர் சேலம் மற்றும் கோவையில்பங்கேற்கவிருந்த விழாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஆகஸ்ட் 1ம் தேதி முதல்வர் கருணாநிதி கோவை வருகை தருவதாக இருந்தது.கோவையில், நீதிமன்ற வாளாகத் திறப்பு விழா, கமிஷனர் அலுவலகத் திறப்பு விழா,பொள்ளாச்சியில் ஒருமடை விட்டு ஒருமடைப் பாசன திறப்பு விழா, மற்றும்உடுமலையில் நாராயண கவி மணிமண்டபத் திறப்பு விழா ஆகிய விழாக்களில் கலந்துகொள்வாதாக இருந்தது.
ஆனால், நாஞ்சில் மனோகரன் மறைவையொட்டி முதல்வரின் நிகழ்ச்சிகள் அனைத்தும்ரத்து செய்யப்பட்டு விட்டது. கோவை கமிஷனர் அலுவலகம் கடந்த ஆண்டுசெப்டம்பர் மாதம் திறக்கப்படுவதாக இருந்தது. பின்னர் பிப்ரவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஆகஸ்ட் 2ம் தேதி உறுதியாகத் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தற்போதுநாஞ்சில் மனோகரன் மறைவையொட்டி, ஆகஸ்ட் 2ம் தேதி நடக்கவிருந்த விழாவும்ரத்து செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications