400 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஆம்புரோஸ்
நக்கீரன் பத்திரிக்கை நிருபர் கொலை: வீரப்பனை கோபால் சந்திப்பதில் சிக்கல்
திருச்சி:
பெரம்பலூரில் நக்கீரன் பத்திரிக்கை நிருபர் கொலை செய்யப்பட்டார்.
திருச்சி அருகே உள்ளது பெரம்பலூரில் நக்கீரன் வாரஇதழின் நிருபராகப் பணியாற்றிவந்தகவர் செல்வராஜ். இவர் திங்கள்கிழமை நள்ளிரவில் கொலை செய்யப்பட்டார்.
அடையாளம் தெரியாத 4 பேர் இவரை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இந்த சம்பவத்தை அடுத்து சந்த கடத்தல் வீரப்பனை சந்திக்க நக்கீரன் கோபால்செல்வாரா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன்கடத்திச் சென்றுள்ளான்.
அவரை விடுவிக்க வீரப்பனுடன் பேச்சுவார்த்தை நடத்த நக்கீரன் ஆசிரியர் கோபாலைஅனுப்ப தமிழக, கர்நாடக முதல்வர் திட்டமிட்டிருந்தனர்.
அரசின் வேண்டுகோளை ஏற்று கோபால் செவ்வாய்க்கிழமை காட்டுக்குப்புறப்படுவதாக இருந்தது. ஆனால், இந் நிலையில் அவரது பத்திரிக்கையின் நிருபர்கொலை செய்யப்பட்டுள்ளார்.
இதனால், அவர் உடனடியாக பெரம்பலூர் விரைய திட்டமிட்டுள்ளார். அவர்வீரப்பனை சந்திக்க இப்போது காட்டுக்கு செல்லமாட்டார் என்று தெரிகிறது.
மேலும் 1997ம் ஆண்டுக்குப் பின் தனக்கு வீரப்பனுடன் தொடர்பு ஏதும் இல்லைஎனவும் கோபால் கூறிவிட்டதாகத் தெரிகிறது. அவர் வீரப்பனை சந்திக்க தயாராகஇல்லை என்றும் தெரிகிறது.