400 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஆம்புரோஸ்
Subscribe to Oneindia Tamil
தலையில் கோரிக்கையை எழுதி மாணவர்கள் போராட்டம்
கோவை:
சட்டக் கல்லூரி மாணவர்கள், மொட்டையடித்து, நூதனப் போராட்டம் நடத்தினர்.
தனியார் கல்லூரிக்கு சட்டப் படிப்புத் துவங்க அனுமதியளித்ததை எதிர்த்து கோவை சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தங்களது கோரிக்கையைத் தீவிரப்படுத்தி தீர்வு காண, பல நூதனப் போராட்டங்களில்இறங்க தயார் நிலையில் உள்ளனர். இதன்படி ஜூலை 31-ம் தேதி நடந்த போராட்டத்தில் 5மாணவர்கள் மொட்டையடித்தனர். பின்னர் தலையில் தங்கள் கோரிக்கைகளை எழுதிநூதனமாகப் போராட்டம் நடத்தினர்.
முதல்வர் கருணாநிதி, ஆகஸ்ட் 2ம் தேதி கோவை வருவதாக இருந்தது. அப்போது கருப்புக்கொடி காட்டத் திட்டமிட்டனர். ஆனால் முதல்வரின் வருகை ரத்து செய்யப்பட்டு விட்டது.












Click it and Unblock the Notifications