400 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஆம்புரோஸ்
கர்நாடகத் தமிழர்களுக்கு பாதுகாப்பு கோருகிறார் ராமதாஸ்
சென்னை:
கர்நாடக மாநிலத்தில் வசிக்கும் தமிழர்களைக் கலவரத்தில் இருந்து காப்பாற்றவேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் எஸ். ராமதாஸ் கோரிக்கைவிடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:ட
வீரப்பனால் பிரபல கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டதை அடுத்து கர்நாடகத்தில்வசிக்கும் தமிழர்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலைஏற்பட்டுள்ளது.
இதையடுத்து தமிழர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க மத்திய அரசும், கர்நாடக மற்றும்தமிழக அரசுகளும் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
வீரப்பனால் ராஜ்குமார் கடத்தப்பட்டது குறித்து இரு மாநில அரசுகளும் தீவிரநடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. யாருடைய உயிருக்கும் அச்சுருத்தல்ஏற்படக்கூடாது என்பதுதான் பாமகவின் கருத்து.
கடத்தல் சம்பவத்தைக் காரணமாக வைத்து கர்நாடகத் தமிழர்கள் மீது தாக்குதல்நடத்துவதும், தமிழர்களின் நிறுவனங்கள், கடைகள் மீது தாக்குதல் நடத்துவதும்,தமிழ்ப் பத்திரிக்கை அலுவலகங்கள் தாக்கப்படுவதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
ஆகவே, கர்நாடகத் தமிழர்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்புஅளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று அதில் கூறியுள்ளார்ராமதாஸ்.












Click it and Unblock the Notifications