இந்த வாரம்
நிருபர் கொலை: திருச்சி கலெக்டர் மீது நக்கீரன் குற்றச்சாட்டு
சென்னை:
பெரம்பலூரில் நக்கீரன் வார இதழ் நிருபர் செல்வராஜ் கொலையில் திருச்சி மாவட்டக் கலெக்டருக்கும்பங்கிருக்கலாம் என்று நக்கீரன் குற்றம் சாட்டியுள்ளது.
திருச்சியில் பெரம்பலூர் டவுனில் வசித்து வந்தவர் செல்வராஜ். வயது 40. நக்கீரன் வாரப்பத்திரிக்கை நிருபரானஇவர் திங்கள்கிழமை இரவு அலுவலகத்திலிருந்து கீழே இறங்கி வந்தார்.
அப்போது அலுவலக வாசலில் காரில் வந்திறங்கிய 8 பேர் கும்பல் செல்வராஜை சராமரியாக வெட்டிக் கொன்றது.
பின்னர் அக்கும்பல் காரில் ஏறித் தப்பித்துச் சென்றனர். அதற்குள் போலீஸாருக்குத் தகவல் தரப்பட்டது. காரைத்துரத்திச் சென்ற போலீஸார் நான்கு பேரை மடக்கிப் பிடித்தனர்.
விசாரணை நடத்தி இக்கொலையில் தொடர்புடைய மேலும் 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.
ஜாபர், சிவபாலன், கருணாநிதி, செம்பியன், சிவா, ரகுமான், சக்திவேல், சுப்ரமணியம் உள்பட 9 ரெளடிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதில் ஜாபரும், சிவாவும் திண்டுக்கல் ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள்என்பது தெரிய வந்துள்ளது. இவர்கள் காசுக்காக கொலை செய்யும் கூலிக் கும்பலை சேர்ந்தவர்கள்.
இந்நிலையில் செல்வராஜ் கொலை வழக்கில் திருச்சி மாவட்டக் கலெக்டருக்கு தொடர்பிருக்கலாம் என்று நக்கீரன்குற்றம்சாட்டியுள்ளது.
நிருபர் செல்வராஜ் திருச்சியில் நடந்து வரும் மணல் திருட்டு குறித்து நக்கீரன் வாரப் பத்திரிக்கையில் தொடர்கட்டுரை எழுதி வந்தார்.
இதை எழுத வேண்டாம் என்றும் பிரச்சனையை சுமூகமாக தீர்த்துக் கொள்ளலாம் என்றும் கலெக்டர் மூர்த்தி கூறிவந்தார் என்று நக்கீரன் பத்திரிக்கை கூறியுள்ளது.
இந்நிலையில் செல்வராஜ் கொலை செய்யப்பட்டிருப்பதால் கலெக்டர் மூர்த்தி மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து முதல்வர் கருணாநிதி, தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், போலீஸ் டிஜிபி ஆகியோருக்குநக்கீரன் சார்பில் வாய் மொழிப்புகார் கூறப்பட்டுள்ளது என்று அந்தப் பத்திரிக்கை நிர்வாகிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications