இந்த வாரம்

Subscribe to Oneindia Tamil

காஷ்மீர் படுகொலைகளால் அமைதிப்பேச்சு பாதிக்காது என்கிறார் வாஜ்ப

டெல்லி:
ஜம்மு காஷ்மீரில் நடந்துள்ள படுகொலைச் சம்பவங்களின் பின்னணியில் பாகிஸ்தான்உள்ளது. அங்கு தீவிரவாதிகளுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த விடாமல்தடுப்பதற்காகவே இந்தச் சம்பவம் நடந்துள்ளது. ஆனால் பேச்சுவார்த்தையை இந்தசம்பவம் எந்தவிதத்திலும் பாதிக்காது என்று பிரதமர் வாஜ்பாய் கூறியுள்ளார்.

காஷ்மீரில் 6 இடங்களில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலில் 80 பேர்கொல்லப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக லோக்சபாவில் கேள்வி நேரத்தின்போது வாஜ்பாய் கூறுகையில்,பாகிஸ்தான் தூண்டுதலின்பேரில் இந்த படுகொலைச் சம்பவங்கள் நடந்துள்ளன.ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதிகளுடன் மத்திய அரசு நடத்தவுள்ளபேச்சுவார்த்தையைத் தடுக்கவே இவ்வாறு செய்துள்ளனர்.

தீவிரவாதிகளுக்கு நான் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நாம் அமைதிப்பாதையில் போய்க் கொண்டிருக்கிறோம். அதிலிருந்து வழி மாறிப் போய் விடவேண்டாம்.

காஷ்மீர் சம்பவம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அத்வானி, மாலையில் அறிக்கைசமர்ப்பிப்பார் என்றார் வாஜ்பாய்.

அமைதி காக்கக் கோருகிறது அமெரிக்கா:

காஷ்மீர் சம்பவங்களினால் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் எல்லைப் பகுதியில்பொறுமை காக்க வேண்டும் என்று பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கு அமெரிக்காகோரிக்கை விடுத்துள்ளது.

காஷ் மீர் சம்பவம் இரு நாட்டு எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்எதிரொலிக்கக் கூடாது என்று அமெரிக்கா கூறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+