இந்த வாரம்
கர்நாடக தமிழர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுகோள்
கோவை:
கர்நாடகாவில் உள்ள தமிழர்களுக்கு போதுமான பாதுகாப்பு வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்என கோவை எம்.பி., ராதாகிருஷ்ணன் மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோவையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
பெங்களூரில் தமிழர்கள் தாக்கப்பட்டு வருகின்றனர். பலர் கொலை செய்யப்பட்டுள்ளனர். கன்னட நடிகர்ராஜ்குமாரைக் கடத்திச் சென்றதால், அவரது ரசிகர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைஉடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்.
கன்னட ரசிகர்களின் உணர்வுகளை நாங்கள் மதிக்கிறோம். தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துவது தான் இதற்கு தீர்வுஅல்ல.
ராஜ்குமாரை மீட்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் செல்லத்துரை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர்கள் மீது கர்நாடகரசிகர்கள் நடத்தும் தாக்குதலை நிறுத்த வேண்டும். அங்கு தமிழர்களுக்கும், அங்குள்ள தமிழர்களின்நிறுவனங்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.