இந்த வாரம்
வீரப்பனைச் சந்திக்க காட்டுக்குள் சென்றார் நக்கீரன் கோபால்
சென்னை:
சந்தனக் கடத்தல் வீரப்பனைச் சந்திக்க நக்கீரன் கோபால், அவன் மறைந்துள்ளகாட்டுப்பகுதிக்கு செவ்வாய்க்கிழமை மாலை சென்றார்.
அவருடன் நக்கீரன் நிருபர் சிவசுப்பிரமணியம் உள்பட 2 பேர் காட்டுக்குள்சென்றுள்ளனர்.
தமிழகத்தில் ஈரோடு மாவட்டத்தில் காஜனூர் என்ற கிராமத்தில் உள்ள தனது பண்ணைவீட்டுக்கு வந்திருந்த பிரபல கன்னட திரைப்பட நடிகர் ராஜ்குமார் உள்பட 4 பேரைதுப்பாக்கி முனையில் வீரப்பன் சில தினங்களுக்கு முன் கடத்திச் சென்றான்.
தன்னை 8 நாட்களுக்கு ஒரு அரசுத் தூதர் வந்து சந்திக்கவேண்டும் என்று கேஸட்டில்அவன் நிபந்தனை விதித்திருந்தான். இது தொடர்பாக தமிழக முதல்வர்கருணாநிதியும், கர்நாடக முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணாவும் தீவிர ஆலோசனைநடத்தினர்.
அதன் பிறகு, வீரப்பனைச் சந்திக்க நக்கீரன் கோபாலை மீண்டும் தூதராக அனுப்பலாம்என்று முடிவு செய்யப்பட்டது. இது குறித்து கோபாலிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.அவரும் வீரப்பனைச் சந்திக்க காட்டுக்குள் செல்ல சம்மதம் தெரிவித்தார்.
இதற்கிடையே, நக்கீரன் பத்திரிக்கையின் பெரம்பலூர் நிருபர் கொலைசெய்யப்பட்டார். இதையடுத்து கோபாலின் பயணத்தில் தடங்கல் ஏற்பட்டது. நிருபரின்இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட கோபால், செவ்வாய்க்கிழமை மாலை அங்கிருந்தேநேராக வீரப்பன் மறைந்துள்ள காட்டுப்பகுதிக்கு விரைந்தார்.
அவருக்குத் துணையாக நக்கீரன் நிருபர் சிவசுப்பிரமணியம் உள்பட 2 பேர் உடன்சென்றுள்ளனர். மூன்று பேரும் வீரப்பனைச் சந்தித்தனரா என்று தெரியவில்லை. மூன்றுபேரிடமிருந்தும் இதுவரை எந்தத் தகவலும் இல்லை.
இந் நிலையில், சத்தியமங்கலம் காட்டுப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது.காட்டுக்குள் வீரப்பன் இருக்கும் இடம் மூன்று பேருக்கும் தெரியாத நிலையில்,வீரப்பனிடமிருந்து தகவல் வந்தால்தான் இவர்கள் அவனைச் சந்திக்க முடியும். அதுவரை காட்டுக்குள் இவர்கள் ஓரிடத்தில் காத்திருப்பார்கள்.
வீரப்பனைச் சந்தித்த பின்னர் அல்லது அதற்கு முன்னர் தமிழக முதல்வர் கருணாநிதிஅல்லது கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவை கோபால் தொடர்பு கொள்வார் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
வீரப்பனால் கடத்திச் செல்லப்பட்டுள்ள ராஜ்குமார் மற்றும் 3 பேருடைய நிலை என்ன,அவர்கள் எங்கு உள்ளனர், ராஜ்குமாரின் உடல்நிலை எவ்வாறு உள்ளது என்றதகவல்கள் இதுவரை தெரியவில்லை.
வீரப்பனை நக்கீரன் கோபால் சந்தித்த பிறகுதான் எந்தத் தகவலும் தெரியும். அதற்காககோபாலின் செய்தியை எதிர்பார்த்து அரசு அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications