3-வது அணி அமைக்கும் சிந்தனையே இல்லை என்கிறார் மூப்பனார்
சென்னை:
தமிழகத்தில் 3-வது அணி அமைப்பது பற்றி சிந்தனையே இல்லை என்று தமிழ் மாநிலகாங்கிரஸ் தலைவர் மூப்பனார் கூறியுள்ளார்.
சில தினங்களுக்கு முன் டெல்லி சென்ற மூப்பனார், அங்கு சோனியா காந்தியைச்சந்தித்துப் பேசினார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப் பேரவைத்தேர்தலில் மூப்பனார் தலைமையில் 3-வது அணி அமையும் என்று கூறப்பட்டதைஅடுத்து சோனியாவை, மூப்பனார் சந்தித்தது முக்கிய நிகழ்ச்சியாகக் கருதப்பட்டது.
இருவரும் 3-வது அணி அமைப்பது பற்றி பேசியிருக்கலாம் என்றுகூறப்பட்டது.ஆனால் அதை மூப்பனார் மறுத்துள்ளார். நிருபர்களிடம் அவர்கூறியதாவது:
மூன்றாவது அணி என்பது ஆகாயத்தில் கட்டும் கோட்டை சோனியாவுடன் தமிழகதேர்தல் கூட்டணி பற்றி எதுவும் பேசவில்லை. தமிழக சட்டப் பேரவைக்கு எப்போதுதேர்தல் என்று சோனியா கேட்டார், அடுத்த ஆண்டு தேர்தல் நடக்கும் என்றேன்.
த.மா.க. மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து சோனியாவிடம்எடுத்துரைத்தேன். மூன்றாவது அணி பற்றி எதுவும் அவரிடம் பேசவில்லை.
தமிழகத்தில் 3-வது அணி அமைக்கும் சிந்தனைக்கே நான் வரவில்லை என்றார்மூப்பனார்.