"உண்மையை வரவழைக்கிறாராம்"!: மாணவன் கையில் சூடத்தை பற்ற வைத்த ஆசிரியர்
சென்னை:
5 வயது சிறுவனை கையில் சூடம் ஏற்றி எரித்து சத்தியம் செய்யச் சொன்ன ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
இது குறித்த விவரம் வருமாறு:
விருதுநகர் மாவட்டம் கோட்டையூரில் உள்ள பஞ்சாயத்து ஆரம்பப் பள்ளியில் பயின்று வரும் மாணவன் ஒருவன்தன்னுடன் படிக்கும் மாணவியை அடித்ததாகத் தெரிகிறது. புதன்கிழமை இந்த சம்பவம் நடந்தது.
இது குறித்து அந்த ஆசிரியர் விசாரித்தபோது, மாணவியை தான் அடிக்கவில்லை என்று அந்த சிறுவன்கூறியுள்ளான். இதையடுத்து அவனிடமிருந்து உண்மையை வரவழைப்பதற்காக அவன் கையில் சூடத்தை வைத்துநெருப்பை பற்ற வைத்துள்ளார்.
இதனால் அந்த சிறுவனின் கையில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. வலியால் துடித்த அவன் வீட்டுக்குச் சென்றான்.உள்ளங்கை எரிந்து போன நிலையில் வீட்டுக்கு வந்த தனது மகனைக் கண்டு பதறிப் போன தந்தை அது குறித்துவிசாரித்தார்.
கையில் சூடம் ஏற்றிய அந்த ஆசிரியர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப் பதிவுசெய்து அந்த ஆசிரிய விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.












Click it and Unblock the Notifications