வீரப்பனுக்கு மன்னிப்பு தருவது குறித்து பிறகு யோசிக்கலாம்
கோவை:
நக்கீரன் கோபால் திரும்பி வந்த பிறகே. வீரப்பனுக்கு பொது மன்னிப்பு வழங்குவதுகுறித்து முடிவு செய்ய வேண்டும் என்று தமிழக சட்டசபை எதிர்கடசித் தலைவரும்த.மா.கா.பிரமுகருமான சோ.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
கோவையில் வெள்ளிக்கிழமையன்று நிருபர்களிடம் சோ. பாலகிருஷ்ணன்கூறியதாவது:
நீலகிரி விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். சிறையில் உள்ளமூன்று பேரின் உடல் நிலை மோசமாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
நீலகிரி தடியடி சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்குழு அமைக்க வேண்டும்.
தேயிலைக்கு கட்டுப்படியான விலையை பெற இறக்குமதி வரியை உயர்த்த வேண்டும்.தமிழகத்தில் த.மா.கா. - காங்கிரஸ் உறவு வலுவானதாக உள்ளது.
கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தமிழ் மாநில காங்கிரஸ்மூப்பனார் கட்சி. பிடிக்காதவர்கள் கட்சியை விட்டு வெளியேறி விடலாம் கோவைசட்டக் கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் தேவையற்றது.
வக்கீல்களின் எண்ணிக்கையை தனியார் கல்லூரிக்கு அனுமதி வழங்குவதன் மூலம்அதிகரிப்பதுதான் நல்லது. நக்கீரன் கோபால் திரும்பிய பின்னரே வீரப்பனுக்கு பொதுமன்னிப்பு பற்றி பரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications