For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லாலாவை புறக்கணித்த கிரிக்கெட் உலகம்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

டெல்லியில், சனிக்கிழமை இறந்த கிரிக்கெட் வீரர் லாலா அமர்நாத் உடல் ஞாயிற்றுக்கிழமை லோசி ரோடில் உள்ள மயானத்தில் தகனம்செய்யப்பட்டது.

லாலா அமர்நாத் சுதந்திர இந்தியாவின் முதல் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தவர் இவர். இந்தியாவின் விரல் விட்டு எண்ணக்கூடிய சிறந்தகிரிக்கெட் வீரர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர் லாரா.

லாலா அமர்நாத்தின் உடல் ஞாயிற்றுக்கிழமை தகனம் செய்யப்பட்டது. மூத்த மகன் சுரீந்தர் அமர்நாத் தீ மூட்டினார். லாலாவின் பிற மகன்களானமொகீந்தர் அமர்நாத்தும், ராஜீந்தர் அமர்நாத்தும் உடன் இருந்தனர்.

லாலா அமர்நாத்தின் இறுதிச் சடங்கிற்கு அவரது நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களும் வந்திருந்தனர். ஆனால் அவர் சஞ்சரித்த கிரிக்கெட்உலகிலிருந்து யஷ்பால் ஷர்மா, குரசரண் சிங்கைத் தவிர வேறு எந்த இந்திய கிரிக்கெட் வீரரும் இறுதிச் சடங்கில் பங்கேற்வில்லை.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தைச் சார்ந்த ஒருவரும் புகழ் பெற்ற இந்த வீரரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவில்லை. விளையாட்டுத்துறை அமைச்சகத்திலிருந்தும் ஒருவரும் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளாதது பலரையும் வியப்படையச் செய்தது.

யு.என். ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X