அசாமில் கன மழைதொடர்கிறது...மீட்புப் பணியில் ராணுவம்
கவுஹாத்தி:
அசாம் மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையினால் லட்சக்கணக்கில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்திய விமானப் படை வீரர்கள்விமானம் மூலம் உணவுப் பொட்டலங்கள், மற்றும் நிவாரண உதவிகளைச் செய்து வருகின்றனர்.
ரயில் மற்றும் பஸ் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ரங்கியா டவுன் பகுதி முழுவதும் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
14 மாவட்டங்களில் 140 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தேமாஜ் மாவட்டம்கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 120 கிராமங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது.
சிசிபோரகான் பகுதியில் ஒருவர் மழைவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். ஜோனி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காக 11நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் 50,000 க்கும் மேற்பட்ட மக்களை மீட்டுள்ளனர்.
தராங் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 41முகாம்கள் 90,000 க்கும் மேற்பட்ட மக்களை மீட்டுள்ளனர். பார்பேட்டா, நால்பேரிமாவட்டங்களில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இந்த இரண்டு மாவட்டங்களிலும் மீட்புப்பணிக்காக இதுவரை 56 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. 18க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
யு.என்.ஐ.