மாநில சுயாட்சிக்கு ஜெயலலிதா கடும் எதிர்ப்பு
சென்னை:
மாநில சுயாட்சி கொள்கையை அ.தி.மு.க.ஆதரிக்காது என அக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக் கிழமை மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் சென்னையில் மாநில சுயாட்சி சிறப்புமாநாடு நடந்தது. கூட்டத்தில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின்உரையை அவைத் தலைவர் காளிமுத்து படித்தார்.
அதில் ஜெயலலிதா கூறியிருந்ததாவது:
எப்போதும் அடிமையாக இருக்க மாட்டோம். ஆனால் பிரிவினையை நாடமாட்டோம். அனைவரும் சமமாக இருப்பதை விரும்புகிறோம். எம்.ஜி.ஆர் காலம்முதலே இந்தியாவின் ஒருமைப்பாட்டை ஆதரித்து வருகிறோம்.
காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லா சுயாட்சி தீர்மானம் மூலம் பிரிவினை வாத்தைதுவக்கி வைத்துள்ளார். இது நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு நல்லதல்ல .
மத்திய அரசிடமுள்ள அதிகாரங்கள் அனைத்தும் பகிர்ந்தளிக்கப்பட
வண்டும் என்பது எங்கள் கோரிக்கை. மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டது காஷ்மீர்மட்டுமல்ல.மேலும் பல பகுதிகள் உள்ளன. காஷ்மீருக்கு சுயாட்சி அளித்தால் மற்றமாநிலங்களுக்கும் சுயாட்சி கோரிக்கை பரவும்,
இந்தியாவை பிரித்து அதிலிருந்து தனி தமிழ் தேசம் ஒன்றை உருவாக்கி அதற்கு தான்தலைவராக வேண்டும். வைகோவை வெளியுறவு
அமைச்சராக்கி, பிரபாகரனை தளபதி ஆக்க வேண்டும் என்பது கருணாநிதியின்துரோகத் திட்டம். அதனால் சுயாட்சிதிட்டத்தை ஆதரிக்க மாட்டோம் என அ.தி.மு.க.பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
மூப்பனார் பேசுகையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கும் சுயாட்சி கொள்கையில்உடன்பாடு இல்லை என்றார்.
கேரள முதல்வர் நாயனார் பேசுகையில், மாநில சுயாட்சிக் கொள்கையை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் 1953-ம் ஆண்டுக்கு முன் கொடுக்கப்பட்ட அந்தஸ்து தரப்படவேண்டும் என்பதை ஏற்க முடியாது என்றார்.
மூப்பனாரும் எதிர்ப்பு
மாநில சுயாட்சிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
அவர் பேசுகையில், முதலில் மாநில சுயாட்சி என்பதற்கு அகில இந்திய அளவில் சரியான விளக்கத்தை ஏற்படுத்தவேண்டும்.
வேலையில்லாத் திண்டாட்டம், அடிப்படை வசதிகள் குறைவு உள்ளிட்ட மக்கள் பிரச்சினைகளில் அதிககவனம் செலுத்தாமல் மாநில சுயாட்சி போன்றநிர்வாகப் பிரச்சினைகளில் அதிக கவனம்செலுத்தப்படுகிறது.
மாநில சுயாட்சி என்பது குறித்து பல விதமான கருத்துக்கள் கூறப்படுகின்றன. இந்தியாவைக் கூறுபோடும் வகையில்தான் மாநில சுயாட்சி இருக்கும்.இந்தியாவைத் துண்டாடும் எந்த முயற்சியையும் த.மா.கா. கடுமையாக எதிர்க்கும்.
அதே நேரத்தில் மாநிலங்களுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கவேண்டும் என்பதில் த.மா.கா. உறுதியாக உள்ளது. அதிகாரம் ஓரிடத்தில்குவிந்துவிடாமல் அது பரவலாக்கப்படவேண்டும். உள்ளாட்சிஅமைப்புகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கவேண்டும் என்றார் மூப்பனார்.