For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வீரப்பனை மன்னித்தால் போலீசுக்கு அவமானம் ... தேவாரம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சந்தனக் கடத்தல் வீரப்பனுக்குப் பொது மன்னிப்பு வழங்கக்கூடாது. அப்படி நடந்தால் அது போலீஸ் துறைக்கே அவமானம் என்று தமிழக முன்னாள் டி.ஜி.பிதேவாரம் தெரிவித்தார்.

வீரப்பனுக்குப் பொது மன்னிப்பு கொடுப்பது என்று எந்த மாநில அரசு முடிவு எடுத்தாலும் அது போலீஸ் துறைக்கே மிகப் பெரிய அவமானம்.வீரப்பனுக்குப் பொது மன்னிப்பு அளித்தால் காட்டுக்குள் நடந்த கொடூரம் இனி நாட்டுக்குள் நடக்கும்.

நாங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறோம். கிரிமினலுக்குப் பொது மன்னிப்புக் கொடுக்கிறீர்களா என்று ஒட்டுமொத்த போலீஸாரும் வேலை செய்வதையேநிறுத்திக் கொள்வார்கள்.

எதிர்ப்புகளை மீறி வீரப்பனுக்கு பொது மன்னிப்பு கொடுக்கும் பட்சத்தில் பாதிக்கப்பட்ட போலீஸாரில் யாராவது ஒருவர் உச்சநீதிமன்றம் சென்றால் தனதுமுடிவை அரசு வாபஸ் பெற வேண்டியிருக்கும்.

வீரப்பன் செய்துள்ள கொலைகளுக்கு நேரடி சாட்சிகள் பலர் உள்ளனர். சட்டத்தின் எந்த கோணத்தில் பார்த்தாலும் வீரப்பனுக்குப் பொது மன்னிப்புகொடுக்கமுடியாது.

பொது மன்னிப்பு கொடுக்கப்பட்டு நாட்டுக்குள் வீரப்பன் வரும் பட்சத்தில் அவனுக்கும், அவனால் பாதிக்கப்பட்ட கும்பலுக்கும் மீண்டும் மோதல்ஏற்படும். காட்டுக்குள் நடந்த கொடூரம் இனி நாட்டுக்குள்ளும் நடக்கும்.

வீரப்பன் சரணடைந்து நீதிமன்றத்தில் வழக்குகளைச் சந்திக்கலாம். தண்டனை உறுதி செய்யப்பட்டால் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு கொடுக்கட்டும்.குடியரசுத் தலைவர் எந்த முடிவு எடுத்தாலும் அதை இந்த நாடே ஏற்றுக் கொள்ளும் என்றார் தேவாரம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X