சேலம் அதிமுக நிர்வாகிகளை கூண்டோடு நீக்கினார் ஜெ.
சென்னை:
கட்சியைப் பலப்படுத்தும் திட்டத்தின் கீழ் சேலம் மாவட்ட நிர்வாகிகள் சிலரை அதிமுகபொதுச் செயலாளர் ஜெயலலிதா நீக்கியுள்ளார்.
திங்கள்கிழமை தான் நாமக்கல் மாவட்ட ஜெயலலிதா பேரவை நிர்வாகிகளை அவர்நீக்கினார். இப்போது சேலம் மாவட்ட அதிமுக நிர்வாகிகளை அவர் நீக்கியுள்ளார்.
1996-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்குப் படுதோல்வி ஏற்பட்டதைஅடுத்தும், அதிமுக உள்கட்சித் தேர்தலில் முறைகேடுகள் நடந்ததை அடுத்தும்முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் என முக்கியபொறுப்புகளில் இருந்தவர்ளை சில மாதங்களுக்கு முன் ஜெயலலிதா கூண்டோடுநீக்கினார்.
கட்சியைப் பலப்படுத்துவதற்காக முறைகேடுகளில் ஈடுபட்டவர்களை நீக்கியதாகஅப்போது ஜெயலலிதா அறிவித்தார். மேலும், இத்தகைய நடவடிக்கை தொடரும்என்றும் அறிவித்தார்.
அதன்படி அவ்வப்போது சில நிர்வாகிகளை அவர் நீக்கி வந்தார். இப்போது சேலம்மாவட்ட அதிமுக நிர்வாகிகளை அனைவரையும் அவர் நீக்கியுள்ளார்.












Click it and Unblock the Notifications