தாக்குதலைத் தொடங்கினர் ஹிஸ்புல் முஜாஹிதீன்கள்
ஸ்ரீநகர்:
சண்டை நிறுத்தத்தை வாபஸ் பெற்றுக் கொண்ட ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதிகள்தங்களது தாக்குதலைத் தொடங்கியுள்ளனர். அவர்களின் முதல் இலக்கு காஷ்மீரின்பாரமுல்லா மாவட்டத்திலுள்ள ராணுவத் தலைமையகம்.
இந்தத் தாக்குதல் தவிர மாநிலம் முழுவதிலும் நடந்த பல்வேறு தாக்குதல்களில் 4தீவிரவதிகள் கொல்லப்பட்டனர். இவர்களில் மூன்று பேர் வெளிநாட்டுத்தீவிரவாதிகள்.
பாரமுல்லாவில் உள்ள ராணுவக் கோட்ட தலைமையகம் மீது தீவிரவாதிகள் ஐந்துமுறை கிரனேட் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலுக்கு ஹிஸ்புல் முஜாஹிதீன்தத்காரணம் என்று நினைக்கிறோம்.
ராணுவ வீரர்கள் திருப்பிச் சுட்டனர். இந்த மோதல் ஒரு மணி நேரம் நீடித்தது. இதில்எந்த சேதமும் ஏற்படவில்லை.
மற்ற தாக்குதல்களில், லஷ்கர் ஈ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த இரண்டு தீவிரவாதிகள்கொல்லப்பட்டனர்.
சபபோரா என்ற இடத்தில் நடந்த தாக்குதலில் பாகிஸ்தான் தீவிரவாதி ஒருவர்கொல்லப்பட்டார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications