அவர் வருவாரா?
சென்னை:
வீரப்பன் விவகாரம் நாளுக்கு நாள், பல்வேறு கோணங்களில் சென்று கொண்டிருக்கிறது.
அரசு தூதராக, வீரப்பனை சந்திப்பதற்காக காட்டிற்குச்சென்ற நக்கீரன் கோபால், வீரப்பனை சந்திக்க முடியாமலேயே, காட்டைவிட்டு கிளம்பிவிட்டார் என்று பேசுகிறார்கள் தமிழக காவல் துறை அதிகாரிகள்.
கோபால் எவ்வளவோ முயற்சித்தும் காட்டுக்குள்ளிருந்து வீரப்பன் அனுப்பிய நபரே கோபாலை சந்தித்து வருகின்றார். அவரும், வீரப்பன் இப்பொழுதுஉங்களை சந்திக்க விரும்பவில்லை என்று மட்டும் சொன்னதாகவும் தகவல்கள் வெளியானது. அதைத் தொடர்ந்து கோபால் காட்டுக்குள்ளிருந்துசெவ்வாய்க்கிழமை இரவே வெளியே வந்துவிட்டார் என்றும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
நக்கீரன் அலுவலகத்தில் தொடர்பு கொண்டு விசாரிக்க நக்கீரன் ஆசிரியர் கோபால், காட்டில் இருக்கிறார் என்றோ, காட்டைவிட்டு வெளியேறிவிட்டார் என்றோ உறுதியாக ஏதும் சொல்லவில்லை. ஆனால் செவ்வாய்க்கிழமை மாலைக்குப் பிறகு ஆசிரியர் கோபால் எங்களுடன் பேசவில்லை.நாங்களும் அவர் பேசுவார் என்று எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறோம் என்கிறார்கள் நக்கீரன் அலுவலகத்தில்.
தமிழகம், கர்நாடகம் இந்த இரு மாநிலங்களும் நடிகர் ராஜ்குமாரை விடுவிக்க, அரசு தூதராக அனுப்பப்பட்ட நக்கீரன் கோபாலையே நம்பியிருந்தது. தூதர்மூலமாக இன்னும் தீர்வு ஏற்படவில்லை என்பதில் தவித்துக்கொண்டிருக்கிறது.
அதே நேரத்தில், வீரப்பன் விஷயமா? என்று தமிழக அதிகாரிகள் அனைவருமே மிக சைலண்டாக ஒதுங்கிக் கொள்கிறார்கள். ராஜ்குமாரை காப்பாற்றதூதர் தவிர அரசு வேறு ஏதேனும் ஸ்பெஷல் முயற்சிகள் எடுத்து வருகின்றதா? என்பதும் சந்தேகமாகவே இருக்கிறது.
இவற்றிற்கு நடுவே, மத்திய அரசும் ராஜ்குமார் கடத்தலை மிக உன்னிப்பாக கவனித்து வருகிறது. ராஜ்குமாரை கடத்தியது வீரப்பன் தானா? அல்லதுவீரப்பன் வேடத்தில் வந்த தீவிரவாதிகளா ? காட்டிற்குள் இருப்பவர்கள் யார் யார்? இந்த பின்னணியில், பாகிஸ்தான் உளவு அமைப்புகள் செயல்பட்டுக்கொண்டிருக்கிறதா? என்று கண்ணோட்டத்தை மாற்றிப் பார்க்க ஆரம்பித்து இருக்கிறதாம் மத்திய அரசு. மத்திய அரசும் இப்பொழுது களத்தில்இறங்கியுள்ளது என்கிறார்கள் தமிழக அதிகாரிகள்.
காட்டைவிட்டு வெளியேறிவிட்ட கோபால் எப்பொழுது , சென்னைக்கு வருவார் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்று உறுதியாகச்சொல்கிறார்கள் அதிகாரிகள்.