சொத்து...சொத்து: முன்னாள் அமைச்சர் பொன்னுசாமி, மனைவி, மகளுக்கு சிறை தண்டனை
சென்னை:
வருமானத்துக்கு அதிகமாக ரூ 77.49 லட்சம் சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் பொன்னுசாமிக்கு 3 வருடக் கடுங்காவல்தண்டனையும், ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுளளது.
இவ் வழக்கில், தொடர்புடைய அவரது மனைவி பிரபாவதி, மகள் மாலா, சகோதரர்கள் வெங்கடேசன், ராஜப்பா ஆகியோருக்கு ஒரு வருடக்கடுங்காவல் தண்டனையும், ரூ 10, 000 அபராதமும் விதிக்கப்பட்டது.
தமிழகத்தில் அ.தி.மு.க.ஆட்சி காலத்தில் கல்வி அமைச்சராக இருந்தவர் பொன்னுச்சாமி. அப்போது இவர் வருமானத்துக்கு அதிகமாக ரூ 77.49 லட்சம்சொத்து சேர்த்ததாக மேல் புகார் எழுந்தது.
இதையடுத்து 1998 ம் ஆண்டு ஜூலை 9 ம் தேதி இவர் மேல் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட்டது. 1999 ம் ஆண்டு ஜனவரி 25 ம்தேதி முதல் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த வழக்கு விசாரணை சென்னை இரண்டாவது தனி நீதிமன்றத்தில் நடந்தது.
இரண்டாவது தனிநீதிமன்ற நீதிபதி வி.ராதாகிருஷ்ணன் இவ்வழக்கை விசாரித்து வந்தார். இவ்வழக்கில் அரசுத்தரப்பு சாட்சிகள் உள்பட பலர்விசாரிக்கப்பட்டனர்.
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் பொன்னுச்சாமி, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிருபிக்கப்பட்டிருப்பதால் அவருக்கு3 வருடக் கடுங்காவல் தண்டனையும், ரூ ஒரு லட்சம் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார் நீதிபதி ராதாகிருஷ்ணன்.
யு.என்.ஐ.