ஒலிம்பிக்: தீவிர பயிற்சியில் இந்திய ஹாக்கி அணி
டெல்லி:
ஆஸ்திரேலியாவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய ஹாக்கி அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.
டெல்லியில் அணியின் துணை கோச் ஹீரேந்திர சிங்கின் நேரடி கண்காணப்பில் தேசிய விளையாட்டரங்கில் இந்த பயிற்சி நடந்து வருகிறது.கேப்டன் பாஸ்கரனும் டெல்லி வந்து சேர்ந்துவிட்டார்.
அணி மிகவும் உற்சாகத்துடனும் தீவிரமாகவும் பயிற்சியில் ஈடுபட்டுளளதாக ஹீரேந்திர சிங் கூறினார். புதிய தொழில்நுட்பங்கள்,அணுகுமுறைகளுடன் அணி இந்த முறை ஒலிம்பிக்கில் களம் இறங்கும்.
ஒலிம்பிக்கில் இந்தியாவுடன் மோதும் நாடுகள் பட்டியலில் அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, ஸ்பெயின், கொரியா, போலந்து ஆகியநாடுகள் உள்ளன. இந்த எல்லா அணிகளையுமே நாங்கள் சீரியஸாக எடுத்துக் கொண்டுள்ளோம் என்கிறார் சிங்.
ஒலிம்பிக் போட்டிக்குக்கு இன்னும் 1 மாதம் இருக்கிறது. ஆனாலும், சில தினங்களில் அணி ஆஸ்திரேலியாவுக்குப் புறப்படுகிறது.அங்கு சில பயிற்சிப் போட்டிகளிலும் இந்தியா பங்கேற்கும்.
இந்த பயிற்சிப் போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து, கனடா ஆகிய நாடுகள் விளையாட இருக்கின்றன. இது தவிரஹாலந்துடனும் போட்டிக்கு ஏற்பாடு செய்ய முயன்று வருகிறோம். மேலும் ஆஸதிரேலியாவில் உள்ள உள்நாட்டு ஹாக்கிஅணிகளுடனும் விளையாடுவோம் என்றார்.
முன்னதாக பெங்களூரில் அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டது.