கட்சியாக மாறுகிறது முதலியார் கழகம்
திருச்சி:
அனைத்து முதலியார் மற்றும் வெள்ளாளர்கள் முன்னேற்றக் கழகம் புதிய கட்சிதொடங்க உள்ளது.
இக் கழகம், இதுவரை ஜாதி அமைப்பாக செயல்பட்டு வந்தது. இப்போது தங்கள்கழகத்தை கட்சியாக மாற்ற முடிவு செய்துள்ளனர்.
அடுத்தமாதம் 15ம் தேதி தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்தநாளன்று புதிய கட்சி தொடங்கப்படும். அன்றைய தினம் மாலை சென்னை மெரீனாகடற்கரையில் மிகப் பெரிய ஊர்வலமும் அதைத் தொடர்ந்து பொதுக் கூட்டமும்நடைபெறும்.
இத்தகவலை கழக நிறுவனர் ஏ.சி.சண்மகம் தெரிவித்தார். மேலும், தமிழக சேனைத்தலைவர் கழகம் எங்களுடன் இணைந்து விட்டது. எங்கள் கட்சிக்கு தனதுஆதரவையும் அவர்க்ள் தெரிவித்துள்ளனர் என முதலியார் கழக நிறுவனர் சண்முகம்தெரிவித்தார்,
புதிய கட்சி தொடங்குவதன் நோக்கமே, கடந்த எட்டு ஆண்டுகளாகஅரசிய்லவாதிகளால் புறக்கணிக்கப்பட்ட முதலியார், வெள்ளாளர் மற்றும் பலசமூகத்தினரின் முன்னேற்றத்துக்காக பாடுவதற்கே எனவும் சண்முகம் கூறினார்.
யு.என்.ஐ.