விமானம் மீது பறவை மோதியது - 62 பேர் உயிர் தப்பினர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
விமானத்தின் மீது பறவை மோதியது. ஆனால், அதில் பயணம் செய்த 55 பயணிகள்உள்பட 62 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
சென்னை-பெங்களூர்-மங்களூர் மார்க்கத்தில் செல்லும் அலையன்ஸ் விமானம்,சென்னை விமான நிலையத்திலிருந்து வியாழக்கிழமை காலை புறப்பட்டது. க்குஓடுபாதையில் விமானம் ஓடிக் கொண்டிருந்தபோது விமானத்தின் மீது பறவைமோதியது.
இதையடுத்து விமானம் மேலே செல்லாமல் மீண்டும் விமான நிலையத்துக்கேதிருப்பப்பட்டது. விமானத்துக்குள் 55 பயணிகளும், 7 விமான சிப்பந்திகளும்இருந்தனர்.
பறவை மோதியதால் விமானத்துக்குச் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இருப்பினும்முழுமையான பரிசோதனைக்குப் பிறகு 5 மணி நேரம் தாமதமாக விமானம் மீண்டும்புறப்பட்டுச் சென்றது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications