திரிபுராவில் மீண்டும் கலவரம் - இருவர் கொலை, 125 வீடுகள் தீக்கிறை
அகர்தலா:
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் மீண்டும் கலவரம் ஏற்பட்டுள்ளது. வட திரிபுராவில் ஜெயஸ்ரீஎன்ற இடத்தில் ஏற்பட்ட கலவரத்தில் 125-க்கும் அதிகமான வீடுகள் தீக்கிறையாக்கப்பட்டன.
ஜெயஸ்ரீ மார்க்கெட்டுக்கு சனிக்கிழமை காலை வந்த தீவிரவாதிகள், மலைவாழ் மக்கள் இனத்தைச் சேராததொழிலதிபர் ஒருவரை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றுவிட்டனர்.
இக் கடத்தலைத் தொடர்ந்து அப் பகுதியைச் சுற்றியுள்ள 5 கிராமங்களில் கலவரம் பரவியது. கலவரத்தில் ஈடுபட்டகும்பல் அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் உள்பட மலைவாழ் இனத்தைச் சேர்ந்த இருவரைக் கொன்றது. 125 வீடுகள்தீக்கிறையாக்கப்பட்டன.
இதையடுத்து சம்பவ இடத்துக்குப் பாதுகாப்புப் படையினர் விரைந்து சென்று கலவரத்தை அடக்கினர். தற்போதுவட திரிபுரா முழுவதும் பாதுகாப்புப் படையினரின் தீவிர கண்காணிப்பில் உள்ளது.
உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்தில் முகாமிட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனித்து வருகின்றனர்.கலவரத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மீண்டும் கலவரம் ஏற்படலாம் என்று முன்னெச்சரிக்கையில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களைச் சேர்ந்தமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
யு.என்.ஐ.