கடலில் படகு கவிழ்ந்து 12 பாகிஸ்தான் மீனவர்கள் சாவு
Subscribe to Oneindia Tamil
கராச்சி:
அரபிக் கடலில் படகு கவிழ்ந்து பாகிஸ்தானைச் சேர்ந்த 12 மீனவர்கள் நீரில் மூழ்கிஇறந்தனர்.
கராச்சிக்கு தெற்கே 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டோயென் கேதி பந்தர் என்றஇடத்திலிருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை 15 மீனவர்கள் ஒரு படகில் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர்.
மீன் பிடித்துவிட்டு கரைக்கு திங்கள்கிழமை திரும்பிக் கொண்டிருந்தபோது பெரியஅலையில் சிக்கி படகு கவிழ்ந்தது. இந்த திடீர் விபத்தில் 12 மீனவர்கள் நீரில் மூழ்கிஇறந்தனர். 3 மீனவர்கள் நீந்தி உயிருடன் கரையேறினர்.
கடலுக்குள் மூழ்கி இறந்த மீனவர்களின் சடலங்களை மீட்க போலீஸார் நடவடிக்கைமேற்கொண்டுள்ளதாக பாகிஸ்தான் தொலைக்காட்சி தெரிவித்தது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications