For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

350 போலி கைக்கடிகாரங்கள் பறிமுதல் - 3 பேர் கைது

By Staff
Google Oneindia Tamil News

திருச்சி:

போலி கைக் கடிகாரங்கள் விற்றதாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.அவர்களிடமிருந்து 350 போலி கடிகாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருச்சி நகரில் போலி கைக் கடிகாரங்கள் விற்கப்படுவதாகப் போலீஸாருக்குத் தகவல்கிடைத்தது. இதையடுத்து நகரம் முழுவதும் போலீஸார் சோதனை மேற்கொண்டனர்.

அண்ணா சிலை பகுதியில் இருந்த சில கடிகாரக் கடைகளில் நடத்திய சோதனையில்அங்கு போலி கைக்கடிகாரங்கள் விற்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அக் கடிகாரக் கடைகளின் உரிமையாளர்ள் 3 பேர் கைதுசெய்யப்பட்டனர். கடைகளில் இருந்து 350 போலி கைக் கடிகாரங்கள் பறிமுதல்செய்யப்பட்டன.

வாடிக்கையாளர்களைக் கவருவதற்காக புகழ்பெற்ற சிட்டிஸன் நிறுவனத்தின் பெயரில்இவர்கள் போலி கைக்கடிகாரங்களைத் தயாரித்து விற்று வந்தது விசாரணையில்தெரியவந்தது.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X