For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தொழிலாளியைக் கொன்ற 2 பேருக்கு ஆயுள் தண்டனை

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

தொழிலாளியைக் கொலை செய்த இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள செகுடந்தாளி என்ற ஊரைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் இதே ஊரில்உள்ள ஒரு மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

கடந்த 1999ம் ஆண்டு நவம்பர் மாதம் இவருக்கும் இதே ஊரைச் சேர்ந்த ஈஸ்வரன், பாப்பையன்ஆகியோருக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் இவர்களுக்கிடையே விரோதம் வளர்ந்தது.

ஆத்திரமடைந்த ஈஸ்வரனும், பாப்பையனும் முருகேசனைத் தீர்த்துக் கட்டி விடுவது எனத் திட்டம் தீட்டினர்அதன்படி, சம்பவத்தன்று முருகேசனை கத்தியால் குத்தினர். இதில் பலத்த காயமடைந்த முருகேசன் இறந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கொலைக் குற்றவாளிகள் ஈஸ்வரன், பாப்பையன், கொலைக்குஉடந்தையாயிருந்த கோவிந்தசாமி ஆகியோரைக் கைது செய்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கை கோவை முதன்மை நீதிமன்ற நீதிபதி சொக்கலிங்கம் விசாரித்தார். இதில் கோவிந்தசாமி நிரபராதிஎன முடிவு செய்து விடுதலை செய்யப்பட்டார். ஈஸ்வரன் மற்றும் பாப்பையன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனைவிதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X