என் வீட்டுக்காரர் பிடிவாதக்காரர் ... வீரப்பன் மனைவி

Subscribe to Oneindia Tamil

மேட்டூர்:

எனது கணவர் பிடிவாதக்காரர் என்று சந்தனக் கடத்தல் வீரப்பனின் மனைவிமுத்துலட்சுமி கூறியுள்ளார்.

மேட்டூரில் வசிக்கும் சந்தனக் கடத்தல் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமிநிருபர்களிடம் கூறியதாவது:

என் கணவருக்கு அவரது தம்பி அர்ச்சுனன் மீது பாசம் அதிகம். அர்ச்சுனனுக்கு காலில்அடிபட்டு சிகிச்சைக்காக காட்டை விட்டு வெளியே வந்த பொழுது போலீஸார்பிடித்துவிட்டனர். கோர்ட்டுக்கு போலீஸார் அழைத்துச்சென்ற பொழுது சயனைடுதின்று இறந்ததாக போலீஸார் கூறி உள்ளனர்.

அவரது சாவில் மர்மம் இருப்பதாக எனது கணவர் இன்னும் கருதுகிறார். அதனால்போலீஸார் மீது கோபத்தில் இருக்கிறார். அந்த கோபம் இன்னும் தணியாமல்இருக்கலாம். அதனால் இந்த மாதிரியான சமயங்களில் தான் இப்படி கடத்தல் போன்றகாரியங்களில் ஈடுபடுகிறார்.

என்கணவர் பிடிவாதக்காரர் . நியாயமான வகையில் போராட நினைத்து வருகிறார்.ஒன்றும் அறியாத 51 பேரை தடா கைதிகளாக சிறையில் அடைத்து வைத்து உள்ளனர்.அவர்களை விடுவிப்பதற்காக இந்த போராட்டத்தை நடத்தி வருகிறார் என்றுதெரிகிறது.

அரசு தடா கைதிகளை ஜாமீனில் விடுதலை செய்வதாக கூறுகிறது. அதில் என்கணவருக்கு திருப்தியில்லாமல் இருக்கலாம். தற்பொழுது அவர்களை ஜாமீனில்விடுதலை செய்தாலும் மீண்டும் அவர்களை கைது செய்வார்கள்.

நடிகர் ராஜ்குமாரை என் கணவர் துன்புறுத்தியிருக்க மாட்டார். இனியும் துன்புறுத்தமாட்டார். கர்நாடக மக்கள் கவலைப்படத் தேவையில்லை. என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+