பெட்டி தொழிலை பாதுகாக்க கோருகிறார் வைகோ

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பெட்டித் தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை மாலை முதல்வர் கருணாநிதியைத் தலைமைச்செயலகத்தில் சந்தித்துப்பேசினர்.

அப்பொழுது, தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கங்கள் சார்பில் கருணாநிதியிடம், வைகோ கோரிக்கை மனு கொடுத்தார். அதில், தீப்பெட்டித் தொழிலில் பலலட்சக்கணக்கான தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெற்று வாழ்ந்து வருகிறார்கள். குறிப்பாக இதில் 90 சதவீதபெண்கள் ஈடுபட்டுள்ளனர்.

உலக வர்த்தக அமைப்பு ஒப்பந்தப்படி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு தீப்பெட்டி இறக்குமதி செய்ய உலக வர்த்தகஅமைப்பின் உத்தரவை இந்திய அரசு அனுமதிக்க உத்தேசித்திருப்பதாக அறிகிறோம். இதன் மூலம் தீப்பெட்டி தொழில் முழுமையாக அழியும் அபாயநிலையில் உள்ளது. இதனால் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழக்க நேரிடும்.

எனவே, ஏழைத் தொழிலாளர்களை பாதுகாக்க தீப்பெட்டி தொழில் நலிவடையாமல் இயங்கிட தீப்பெட்டி இறக்குமதியை முற்றிலும் தடை செய்யவேண்டிய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் தீப்பெட்டித்தொழிலில் இயந்திரங்கள் புகுத்தப்படுவதால் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடிசை தீப்பெட்டிக் கூடங்கள் மூடப்பட்டுதொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே அரசின் அனுமதி இன்றி இயங்கி வரும் எந்திரத் தீப்பெட்டி தொழிற்சாலைகளை தடை செய்து தீப்பெட்டி தொழிலை வாழ வைக்கும்படியும்கேட்டுக் கொள்கிறோம்.

முதல்வர் கருணாநிதியை சந்தித்துவிட்டு வெளியே வந்த வைகோ நிருபர்களிடம் கூறுகையில், தீப்பெட்டி தொழில் நலிவடையாமல் பாதுகாக்க அனைத்துநடவடிக்கைகளையும் எடுப்பதாக முதல்வர் உறுதி கூறியுள்ளார் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+