குழந்தையைக் கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை
கோவை:
குழந்தையைக் கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
கோவை ராமநாதபுரம், நஞ்சுண்டபுரத்தைச் சேர்ந்தவர் ஞானமணி. இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மீராபாய்.இவர்களுக்கு ஜேஸ்வா (8), ஜெமி (5) என்ற இரு குழந்தைகள் உண்டு.
இவர்களுடன் ஞானமணியின் மைத்துனர் ஆல்பர்ட்சாலின் தங்கியிருந்தார். மின்வாரியத்தில் உதவியாளராக ஆல்பர்ட்சாலின் பணியாற்றி வந்தார். இவர் ஜெமியைஅடிக்கடி திட்டியுள்ளார். இதை ஞானமணி கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆல்பர்ட், குழந்தையைக் கொல்ல முடிவு செய்தார்.
கடந்த 98-ம் ஆண்டு நவம்பர் மாதம் 18-ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூங்கிக் கொண்டிருந்த ஜெமியின் தலையில் அம்மி குழவிக் கல்லைப்போட்டுக் கொன்றார்.
இது தொடர்பாக ராமநாதபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஆல்பர்ட் சாலினைக் கைது செய்தனர்.
கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்த இவ் வழக்கில் ஆல்பர்ட்சாலினுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி சொக்கலிக்கம்வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார்.












Click it and Unblock the Notifications