தமிழகத்தின் தலைவிதியை நிர்ணயிப்போம் ... கண்ணப்பன்
கோவை:
வருங்காலத்தில் தமிழகத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும் கட்சியாக மக்கள் தமிழ் தேசக் கட்சி விளங்கும் என இக்கட்சியின் தலைவர் கண்ணப்பன் தெரிவித்தார்.
முன்பு அ.தி.மு.க அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த கண்ணப்பன், தற்போது யாதவர்கள் இயக்கம் தொடங்கிய மக்கள் தமிழ் தசக் கட்சிக்கு தலைமைபொறுப்பேற்றுள்ளார்.
கோவைக்கு வருகை தந்த கண்ணப்பன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
கட்சி நிர்வாகிகளை தேர்வு செய்ய மாவட்டந்தோறும் சென்று முக்கிய பிரமுகர்களைச் சந்தித்து வருகிறோம். வருங்காலத்தில் இக்கட்சி பலம் மிக்ககட்சியாக விளங்கும்.
தற்போது எங்கள் கட்சிக்கு 183 தொகுதியில் பலம் உள்ளது.
62 தொகுதிகளில் உறுதியாக வெற்றி பெறுவோம். செப்டம்பர் மாத இறுதிக்குள் 10 மாநாடுகளை நடத்த திட்டமிட்டுள்ளோம்.
ஆந்திராவில் தெலுங்கு தேசம் புகழ் பெற்று விளங்குவதைப் போல் எங்கள் கட்சியும் வளர்ச்சி பெற்று ஆட்சியைப் பிடிக்கும். கட்சிக்கு 40 லட்சம்தொண்டர்களைச் சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.
கட்சியின் சின்னம் மற்றும் கூட்டணி குறித்து தேர்தல் சமயத்தில் முடிவு செய்வோம். அடுத்த மாதம் 14ம் தேதி திருச்சியில் மாநாடு நடத்தவுள்ளோம். இதில்சரத் யாதவ் மற்றும் லல்லு பிரசாத் யாதவ் ஆகியோர் கலந்து கொள்வர் என்று கண்ணப்பன் கூறினார்.
பேட்டியின்போது, இந்தியன் வங்கியின் முன்னாள் சேர்மன் கோபாலகிருஷ்ணன் உடனிருந்தார்.












Click it and Unblock the Notifications